Friday 31 July 2015

போடிநாயக்கன்பட்டி , நாமக்கல் 8 ம் வகுப்பு

இன்று  31.07.2015 விதை அமைப்பின் சார்பாக நூல்கள் வழங்கும் விழா நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி ஒன்றியம் போடிநாயக்கன்பட்டி கிராமத்தில் உள்ள நடுநிலைப்பள்ளியில் நடைப்பெற்றது. அப்பள்ளியில் 8 வகுப்பு பயிலும் 29 மாணவ மாணவிகளுக்கு அக்கிராமத்தை சார்ந்த கால்நடை மருத்துவர் பிரகாஷ் அவர்களின் சார்பாக அவரின் தகப்பனார் திரு. நல்லப்பன் அவர்கள் புத்தகங்களை வழங்கி சிறப்பித்தார் .இந்நிகழ்ச்சி கால்நடை மருத்துவ கல்லூரி, நாமக்கலில் 3 ஆம் ஆண்டு இளங்கலை பயிலும் மாணவிகள் ராகவி, விபிதா மற்றும் கீர்த்தனா ஆகியோரால் ஒருங்கிணைத்து நடத்தப்பட்டது.








No comments:

Post a Comment