Friday 31 July 2015

போடிநாயக்கன்பட்டி ,நாமக்கல் - 5 ம் வகுப்பு

விதை அமைப்பின் சார்பாக நூல் வழங்கும் விழா இன்று 31.07.2015 நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி ஒன்றியம் போடிநாயக்கன்பட்டி கிராமத்தில் உள்ள துவக்கப்பள்ளியில் நடைபெற்றது. அப்பள்ளியில் 5 வகுப்பு பயிலும் 24 மாணவ மாணவிகளுக்கு அக்கிராமத்தை சார்ந்த கால்நடை மருத்துவர் பிரகாஷ் அவர்களின் சார்பாக அவரின் தகப்பனார் திரு. நல்லப்பன் அவர்கள் புத்தகங்களை வழங்கி சிறப்பித்தார்.இந்நிகழ்ச்சி கால்நடை மருத்துவ கல்லூரி, நாமக்கலில் 3 ஆம் ஆண்டு இளங்கலை பயிலும் மாணவிகள் ராகவி, விபிதா மற்றும் கீர்த்தனா ஆகியோரால் ஒருங்கிணைத்து நடத்தப்பட்டது.





No comments:

Post a Comment